|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 12-10-2008 |
|
|
அன்பே சிவம்...Om Namasivaya
நவராத்திரி கொலு நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின்
பொம்மைகள்.
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின்
பொம்மைகள்.
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின்
பொம்மைகள்.
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள்,
ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள்
போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
பிரம்மா,
விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின்
தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப்
பொங்கல்.
இரண்டாம்
நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
மூன்றாம்
நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
ஏழாம் நாள்
நைவேத்தியம் :-
கல்க்கண்டுச் சாதம்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். மித்ராசாமி SMP-DA
|
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com
CONTACT |