www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT       Fonts        updated  14-06-2011

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

கர வருடத்திய சூரிய சந்திர கிரகணங்கள்


கர வருடமான இந்த வருடத்தில் மூன்று சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் சம்பவிக்கின்றன. சூரிய கிரகணங்கள் இந்தியாவில் தெரியப்போவதில்லை. சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியக் கூடியன.

இந்த வருடத்திய முதலாவது சந்திர கிரகணம் வைகாசி மாதம் 32 ம் திகதி (15-06-2011) இரவு 11மணி 52 நிமிடத்திற்கு கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதத்தில் ஆரம்பித்து இரவு 03 மணி 32 க்கு மூலம் நட்சத்திரத்தில் முடிவடைகிறது. சந்திர கிரகணமானது அனுசம், கேட்டை, மூலம், பூராடம், ஆயில்யம், ரேவதி, அசுவினி, மகம் ஆகிய நட்சத்திரத்திற் பிறந்தவர்களிற்கு தோசத்தினைத் தரும்.
இரண்டாவது சந்திர கிரகணம் கர வருடம் கார்த்திகை மாதம் 24 ம் திகதி (10-12-2011) சனிக்கிழமை ரோகிணி நடசத்திரத்தில மாலை மணி 06 – 15 க்கு ஆரம்பித்து இரவு மணி 09 -48 க்கு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் முடிவடைகிறது. கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, மிருகசீரிடம், அத்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களிற்கு தோசத்தினைத் தரும்.

தோசம் தரக்கூடிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்று விரதமிருந்து, பச்சை அரிசி, முழு உளுந்து (உளுந்தம் பயறு) வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலில் வினாயகர், சந்திரன், இராகு ஆகியோரிற்கு நெய் தீபமிட்டு வழிபட்ட பின்னர் மூலவரை வழிபட வேண்டும். பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும். இதனால் கிரகண தோச பாதிப்பு நீங்கும்.

 

நாம் கடைப்பிடிக்க வேண்டியது
மத ரீதியாக பார்க்கும் போது கேது கிரகம் சூரியனை விழுங்கி பின் கக்குவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கேதுவினால் கொடிய விசமும் வெளிவிடப்படுவதால், இந்த விசமானது நமக்கு பல தீமைகளைத் தரும் எனக் கூறப்படுகிறது. சந்திர கிரகண காலத்தில் இராகு சந்திரனை விழுங்கி பின்னர் கக்கும்போது விசத்தினை வெளிவிடுகிறது. தற்கால விஞ்ஞானமும் சூரிய சந்திர கிரகண வேளையில் நமக்கு தீமை விளைவிக்கக் கூடிய கதிர் வீச்சு இருக்கும் என ஒப்புக் கொள்கிறது. எனவே நாம் இந்த வேளையில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். சமைத்த உணவுகளை வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைத்து அவற்றின் மேல் ஒரு சில தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். இது கிரகண நேரத்தில் மதரீதியான விசத்தினாலோ அல்லது விஞ்ஞான ரீதியான தீய கதிர்களினாலோ நமக்கு ஏற்படக் கூடிய தீய விளைவுகளை தடுக்கக் கூடியதாகும். மற்றும் நாமும் மோதிரமாகவோ அல்லது வேறு விதமாகவோ தர்ப்பை புல்லினை அணிந்திருப்பது பாதுகாப்பினைத் தரும்.

சூரிய கிரகண தோசமுடைய நட்சத்திரக்காரர்கள் கிரகணத்தன்று விரதமிருந்து கோதுமை, கொள்ளு வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலிற்கு சென்று வினாயகர், சூரியன், கேது ஆகியோரிற்கு நெய் தீபமிட்டு வழிபட்டு பின்னர் மூலவரை வழிபட்ட பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும். இதனால் கிரகண தோச பாதிப்பு நீங்கும்.
கிரகண காலத்தில் செய்யப்படும் மந்திர ஜெபங்கள் ஒன்றிற்கு ஆயிரமாக நமக்கு பலன் தரக் கூடியன. மந்திர ஜெப வழிபாடு செய்பவர்கள் இந்த நேரத்தில் மந்திர ஜெப வழிபாடு செய்வது அவர்களிற்கு சிறப்பான பலன்களைத் தரும்.

 


இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.


வாழ்க வளமுடன்

     மித்ராசாமி SMP-DA


          Home               [C] Copyright 2004-2008           www.Aanmegam.com               CONTACT