|

|
 
அன்பே
சிவம்...Om Namasivaya
சர்வதாரி வருடத்திய சூரிய சந்திர கிரகணங்கள்
சர்வதாரி வருடமான இந்த வருடத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் ஆடிமாதத்திலேயே
வருகிறது. இரு கிரகணங்கள் ஒரே மாதத்தில் வருவது நாட்டினைப் பொருத்த மட்டில்
சிறப்பானது அல்ல. இதனால் நாட்டில் பலவித குழப்பங்கள், நோய்களினால் பாதிப்பு,
இயற்கை சீற்றத்தினால் அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பரிகாரமாக
கோவில்களில் முறைப்படி பூசைகள், முறையான ஹோமங்கள் செய்யப்படுதலும், ஆன்மீக
அமைப்பினர் முறையான கூட்டுப் பிராத்தனை செய்தலும் அவசியமாகும்.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் ஆடி மாதம் 17ம் நாள் அதாவது ஆங்கில திகதிக்கு 01-08-2008
வெள்ளிக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் மாலை 4 மணி 40 நிடத்திற்கு ஆரம்பித்து இரவு
6 மணி 07 நிமிடத்தில் விடுகிறது. அன்று ஆடி அமாவாசை நாளும் ஆகும். அன்று தர்பணம்
செய்பவர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தர்பணத்தினை ஆரம்பித்து கிரகணம்
முடிவதற்கு முன் தர்ப்பணத்தினை முடிப்பது நல்லது. இந்த நேரத்தில் செய்யப்படும்
மந்திர ஜெபங்கள் ஒன்றிற்கு ஆயிரமாக நமக்கு பலன் தரக் கூடியன. மந்திர ஜெப வழிபாடு
செய்பவர்கள் இந்த நேரத்தில் மந்திர ஜெபிப்பது அவர்களிற்கு சிறப்பான பலன்களைத்
தரும்.
இந்த வருடத்திய சூரிய கிரகணமானது புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுசம்,
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களிற்கு தோசமாகும். இந்த நட்சத்திரக்காரர்கள்
கிரகணத்தன்று விரதமிருந்து கோதுமை, கொள்ளு வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலில்
இறைவனை வழிபட்ட பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும்.
இதனால் கிரகண தோச பாதிப்பு நீங்கும்.
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் ஆடி மாதம் 32ம் நாள் இரவு 01 மணி 05 நிமிடத்திற்கு ஆரம்பித்து
காலை 04 மணி 14 நிமிடத்திற்கு விடுபடுகிறது. அதாவது ஆங்கில தேதிக்கு 17-08-2008
நள்ளிரவு ஆரம்பித்து அதிகாலையில் விடுகிறது.
இந்த வருடத்திற்குரிய சந்திர கிரகணமானது திருவோணம், அவிட்டம், சதயம்,
மிருகசிரிடம், சித்திரை நட்சத்திரத்திற் பிறந்தவர்களிற்கு தோசத்தினைத் தரும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்று விரதமிருந்து, பச்சை அரிசி, முழு
உளுந்து (உளுந்தம் பயறு) வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலில் இறைவனை வழிபட்ட
பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும். இதனால் கிரகண
தோச பாதிப்பு நீங்கும்.
நாம்
கடைப்பிடிக்க வேண்டியது
மத ரீதியாக பார்க்கும் போது கேது கிரகம் சூரியனை விழுங்கி பின் கக்குவதாக
கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கேதுவினால் கொடிய விசமும் வெளிவிடப்படுவதால்,
இந்த விசமானது நமக்கு பல தீமைகளைத் தரும் எனக் கூறப்படுகிறது. தற்கால
விஞ்ஞானமும் சூரிய சந்திர கிரகண வேளையில் நமக்கு தீமை விளைவிக்கக் கூடிய கதிர்
வீச்சு இருக்கும் என ஒப்புக் கொள்கிறது. எனவே நாம் இந்த வேளையில் உணவு
அருந்துவதை தவிர்க்க வேண்டும். சமைத்த உணவுகளை வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி
வைத்து அவற்றின் மேல் ஒரு சில தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். இது
கிரகண நேரத்தில் மதரீதியான விசத்தினாலோ அல்லது விஞ்ஞான ரீதியான தீய கதிர்களினாலோ
நமக்கு ஏற்படக் கூடிய தீய விளைவுகளை தடுக்கக் கூடியதாகும். மற்றும் நாமும்
மோதிரமாகவோ அல்லது வேறு விதமாகவோ தர்ப்பை புல்லினை அணிந்திருப்பது
பாதுகாப்பினைத் தரும்.
கிரகண காலத்தில் செய்யப்படும் மந்திர ஜெபங்கள் ஒன்றிற்கு ஆயிரமாக நமக்கு பலன்
தரக் கூடியன. மந்திர ஜெப வழிபாடு செய்பவர்கள் இந்த நேரத்தில் மந்திர ஜெப வழிபாடு
செய்வது அவர்களிற்கு சிறப்பான பலன்களைத் தரும்

இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
மித்ராசாமி
SMP-DA
|
|