www.aanmegam.com.      Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  27-10-2010

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தசஷ்டிகவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 

 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

அன்பே சிவம் --- Om Nasivaya

 

தீபாவளி

                                   நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.

நரகாசுரன் கதையைப் பார்ப்போம்.
                                
 மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அபபோது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பொற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான். பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான்.
                                மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார். நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
                             
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

                             தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
 
                                   தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது சிறப்பாக இருக்கும் என்று பார்ப்போம். அதிகாலையில் எண்ணைக்குளியலை அதிகாலை அதாவது சூரிய உதயத்திற்கு இரண்டு நாழிகைகள் முன்னதாக குளித்து விட வேண்டும். மருத்து எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். 

நல்லெண்ணையில் இஞ்சி, பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், விரலி மஞ்சள், சீரகம் சம எடையளவு (நாம் எடுத்த எணணைக்கேற்றவாறு) நன்றா காச்சி ஆறவைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

                                     இதில் குளிக்கும் நீரைப்பற்றி நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. கங்கையில் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்பது விதி. எல்லாரினாலும் கங்கைக்கரைக்கு சென்று குறிப்பாக தீபாவளி அன்று நீராடுவது என்பது முடியாத காரியமாகும். இதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி இரண்டு கைகளையும் வாளியின் மேல் உள்ளங்கை கீழிருக்குமாறு பிடித்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை பதினாறு தடவை குறைந்த பட்சம் மூன்று தடவை ஆவது கூறியபின் அந்த நீரில் நீராட வேண்டும்.
மந்திரம்:-
                  
கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு.
                                      
குளித்தபின் குடும்பமாக பூஜை அறையில் பஞ்சமுக தீபம் ஏற்றி தீபத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து தூப, தீப, ஆராதனை செய்து வழிபாடுகள் செய்த பின் குலதெயவம், இச்ட தெய்வங்களை தூப, தீப, ஆராதனை செய்து வழிபட வேண்டும். பின் விபூதி, சந்தனம், குங்குமம் தரித்துக் கொண்டு புத்தாடைகளை அணிய வேண்டும். சில இடங்களில் குளித்தபின் புத்தாடைகளை அணிந்து அதன்பின் சாமி கும்பிடும் வழக்கமும் உள்ளது. பின்னர் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் மற்றவர்கள் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒருவரிற்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளலாம்.

                                      அதன் பின் வீட்டிலுள்ள எல்லோருமாக சேர்ந்திருந்து இனிப்புவகைகள் பலகாரங்கள் போன்றவற்றை உண்டு மகிழவேண்டும்.
இதன் பின்னர் பட்டாசு வெடித்தல் உறவினர் வீடுகளிற்கு செல்லுதல் என இன்பமாக தீபாவளியினை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

                       
            தீபாவளியை முறைப்படி கொண்டாடினால் நாம் செய்த சகல பாவங்களும் தொலையும். முன்னோர் சாபம், அவர்கள் செய்த பாவம் விலகும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள்.          

 

இந்த இனிய தீபாவளித் திருநாளில் சகல வளமும், சகல நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் புரியட்டும் என வாழ்த்துகிறோம்

 

 

மித்ராசாமி SMP-DA.

 

 

 

  Home                               [C] Copyright 2004-2010                                         www.Aanmegam.com                   CONTACT